என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி
Byமாலை மலர்28 March 2020 8:21 AM GMT (Updated: 28 March 2020 8:21 AM GMT)
லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவருக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 49 வயதான பாதிரியார் லண்டன் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த அவர் கடந்த 18-ந்தேதி ஊருக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவருடைய ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிரியாரின் மனைவி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். பொதுமக்கள் யாரும் பாதிரியார் வீட்டுக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக பாதிரியார் தெரிவித்துள்ளார். அவர் வெளியே எங்கும் சென்றாரா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 49 வயதான பாதிரியார் லண்டன் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த அவர் கடந்த 18-ந்தேதி ஊருக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த போது அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவருடைய ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிரியாரின் மனைவி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். பொதுமக்கள் யாரும் பாதிரியார் வீட்டுக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக பாதிரியார் தெரிவித்துள்ளார். அவர் வெளியே எங்கும் சென்றாரா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X