என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
டெல்லி சென்று திரும்பிய சீர்காழியை சேர்ந்தவருக்கு கொரோனா?
டெல்லி சென்று திரும்பிய சீர்காழியை சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பெருந்தோட்டம், பள்ளிவாசல் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 50). வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்கான விசா சம்பந்தமாக அப்துல் மாலிக் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவாராம்.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அப்துல் மாலிக் டெல்லி சென்றிருந்தார். அங்கு சேலத்தை சேர்ந்த 7 பேர், இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் என இவருடன் சேர்த்து மொத்தம் 12 பேர் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மார்ச் 8-ந்தேதி அப்துல் மாலிக் சேலம் சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு கடந்த 16-ந்தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வெளிமாநிலம் சென்றுவந்ததால் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற அச்சத்தில் அப்துல் மாலிக் நேற்று முன்தினம் (புதன்கிழமை) திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
உடனே மருத்துவ குழுவினர் அப்துல் மாலிக்கை மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு வார்டில் அனுமதிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் அவரை பரிசோதித்த சிறப்பு மருத்துவர்கள் அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இன்று ரத்தமாதிரியின் முடிவு தெரிந்தவுடன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று தெரியவரும். இதற்கிடையே அப்துல்மாலிக்குடன் டெல்லியில் தங்கியிருந்த சேலத்தை சேர்ந்த 4 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
சீர்காழியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளது அப்பகுதி மக்களை மட்டுமின்றி டெல்டா பகுதி மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பெருந்தோட்டம், பள்ளிவாசல் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 50). வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்கான விசா சம்பந்தமாக அப்துல் மாலிக் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவாராம்.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அப்துல் மாலிக் டெல்லி சென்றிருந்தார். அங்கு சேலத்தை சேர்ந்த 7 பேர், இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் என இவருடன் சேர்த்து மொத்தம் 12 பேர் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மார்ச் 8-ந்தேதி அப்துல் மாலிக் சேலம் சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு கடந்த 16-ந்தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வெளிமாநிலம் சென்றுவந்ததால் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற அச்சத்தில் அப்துல் மாலிக் நேற்று முன்தினம் (புதன்கிழமை) திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
உடனே மருத்துவ குழுவினர் அப்துல் மாலிக்கை மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு வார்டில் அனுமதிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் அவரை பரிசோதித்த சிறப்பு மருத்துவர்கள் அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இன்று ரத்தமாதிரியின் முடிவு தெரிந்தவுடன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று தெரியவரும். இதற்கிடையே அப்துல்மாலிக்குடன் டெல்லியில் தங்கியிருந்த சேலத்தை சேர்ந்த 4 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
சீர்காழியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளது அப்பகுதி மக்களை மட்டுமின்றி டெல்டா பகுதி மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Next Story






