என் மலர்
செய்திகள்

தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் பிரேம்
தென்னைமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
கடலூர் அருகே தென்னைமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை 2-வது நாளாக மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி புலியூர் மார்க்கெட் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரேம் (வயது 19). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் சூரப்பன் நாயக்கன் சாவடிக்கு சென்றார்.
அங்கு ஒரு விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் திடீரென்று ஏறினார். அப்போது தோட்டத்தில் நின்றவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனால் பிரேம் தென்னை மரத்தில் இருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
உடனே அங்கு நின்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூரில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதுபோல் திருப்பாதிரி புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.
அங்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தென்னைமரத்தில் இருந்து பிரேமை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்காட்டேன் என்றும், தென்னை மரத்தில் ஏறி என்னை மீட்க முயன்றால் கீழே குதித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து பிரேமிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.
ஆனால் அவர் திட்ட வட்டமாக கீழே இறங்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. இரவு 10 மணிவரை பிரேமிடம் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்கும்படி போலீசார் கூறினர். மின் விளக்கை அணைத்த பிறகு பிரேம் கீழே இறங்குவார் என போலீசார் நினைத்தனர். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை.
அவரை மீட்க பலமுறை போலீசார் முயற்சி செய்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத்தொடர்ந்து பிரேம் தென்னைமரத்தின் உச்சியின் மேல் ஏறி தென்னைமட்டையை பிடித்த படி விடிய விடிய பிரேம் தென்னை மரத்திலேயே இருந்தார். அவர் கீழே விழுந்தால் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னை மரத்தின் கீழே வலை கட்டப்பட்டிருந்தது.
போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தென்னைமரம் அருகே நின்று கொண்டிருந்தனர். இன்று காலை 6 மணி அளவில் பிரேமை கீழே இறங்கும்படி போலீசார் மீண்டும் வற்புறுத்தினார்கள். அப்போதும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் உயரமான ஏணியை கொண்டுவந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்னைமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவரும் வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவரும் வாலிபர் பிரேம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
கடலூர் திருப்பாதிரி புலியூர் மார்க்கெட் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரேம் (வயது 19). இவர் நேற்று மாலை 4 மணி அளவில் சூரப்பன் நாயக்கன் சாவடிக்கு சென்றார்.
அங்கு ஒரு விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் திடீரென்று ஏறினார். அப்போது தோட்டத்தில் நின்றவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனால் பிரேம் தென்னை மரத்தில் இருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
உடனே அங்கு நின்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூரில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதுபோல் திருப்பாதிரி புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.
அங்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தென்னைமரத்தில் இருந்து பிரேமை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்காட்டேன் என்றும், தென்னை மரத்தில் ஏறி என்னை மீட்க முயன்றால் கீழே குதித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து பிரேமிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.
ஆனால் அவர் திட்ட வட்டமாக கீழே இறங்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. இரவு 10 மணிவரை பிரேமிடம் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்கும்படி போலீசார் கூறினர். மின் விளக்கை அணைத்த பிறகு பிரேம் கீழே இறங்குவார் என போலீசார் நினைத்தனர். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை.
அவரை மீட்க பலமுறை போலீசார் முயற்சி செய்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத்தொடர்ந்து பிரேம் தென்னைமரத்தின் உச்சியின் மேல் ஏறி தென்னைமட்டையை பிடித்த படி விடிய விடிய பிரேம் தென்னை மரத்திலேயே இருந்தார். அவர் கீழே விழுந்தால் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னை மரத்தின் கீழே வலை கட்டப்பட்டிருந்தது.
போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தென்னைமரம் அருகே நின்று கொண்டிருந்தனர். இன்று காலை 6 மணி அளவில் பிரேமை கீழே இறங்கும்படி போலீசார் மீண்டும் வற்புறுத்தினார்கள். அப்போதும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் உயரமான ஏணியை கொண்டுவந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தென்னைமரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவரும் வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தென்னை மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துவரும் வாலிபர் பிரேம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
Next Story






