என் மலர்
செய்திகள்

புதுவை பல்கலைக்கழகம்
கொரோனா வைரஸ் பீதி- புதுவை பல்கலைக்கழகத்துக்கு 31-ந்தேதி வரை விடுமுறை
கொரோனா வைரஸ் பீதி கரணமாக புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை வருகிற 31-ந் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சித்ரா அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவிட்-19 காரணமாக வருகிற 31-ந்தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. இக்காலத்தில் வகுப்புகள், தேர்வுகள், நூலகம் உள்பட அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.
விடுதி மாணவ- மாணவிகளும் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்லலாம். விடுதிகள் அனைத்தும் இன்று மூடப்படும்.
பல்கலைக்கழகம் தொடங்கும் போது திரும்பி வரலாம். விடுதியில் இருந்து புறப்படும் போது வார்டனிடம் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் மாணவர்கள் தங்கள் துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர்களிடம் கல்வி தொடர்பாக தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை வருகிற 31-ந் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி புதுவை மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சித்ரா அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவிட்-19 காரணமாக வருகிற 31-ந்தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. இக்காலத்தில் வகுப்புகள், தேர்வுகள், நூலகம் உள்பட அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.
விடுதி மாணவ- மாணவிகளும் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்லலாம். விடுதிகள் அனைத்தும் இன்று மூடப்படும்.
பல்கலைக்கழகம் தொடங்கும் போது திரும்பி வரலாம். விடுதியில் இருந்து புறப்படும் போது வார்டனிடம் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் மாணவர்கள் தங்கள் துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர்களிடம் கல்வி தொடர்பாக தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






