என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து
Byமாலை மலர்13 March 2020 4:24 AM GMT (Updated: 13 March 2020 4:24 AM GMT)
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.
சிதம்பரம்:
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பீதி மக்களை விட்டு அகலவில்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காராணமாக பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து பரவுவதாக தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக முக்கிய அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்.எல்.சி.யில் பயோமெட்ரிக்முறை வருகை பதிவு ரத்துசெய்வதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. அதற்கு பதிலாக தங்களது அட்டையை பயோமெட்ரிக் மிஷினில் காண்பித்து தங்கள் வருகையை பதிவு செய்யலாம் என தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த தகவலை பல்கலை கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பதிவாளர் கிருஷ்ணமோகன் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து உள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பீதி மக்களை விட்டு அகலவில்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காராணமாக பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து பரவுவதாக தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக முக்கிய அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்.எல்.சி.யில் பயோமெட்ரிக்முறை வருகை பதிவு ரத்துசெய்வதாக நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. அதற்கு பதிலாக தங்களது அட்டையை பயோமெட்ரிக் மிஷினில் காண்பித்து தங்கள் வருகையை பதிவு செய்யலாம் என தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த தகவலை பல்கலை கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பதிவாளர் கிருஷ்ணமோகன் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X