என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிக்கன்-65 தயாரித்து தராத ஓட்டல் மாஸ்டருக்கு கரண்டி அடி: அண்ணன்-தம்பி கைது
Byமாலை மலர்10 March 2020 1:32 PM GMT (Updated: 10 March 2020 1:32 PM GMT)
சேதராப்பட்டில் சிக்கன்- 65 செய்து தராததால் ஆத்திரம் அடைந்த அண்ணன்-தம்பிகள் ஓட்டலில் சமையல் மாஸ்டரை சல்லி கரண்டியால் தாக்கினர்.
சேதராப்பட்டு:
வானூர் அருகே ஓட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலைசெய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சமையல் வேலை முடிந்ததும் சுரேஷ் வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது கொண்டிமேடு கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவரின் தம்பி பன்னீர் குடிபோதையில் சிக்கன்-65 தயாரித்து தருமாறு சுரேசிடம் கேட்டார். அதற்கு சுரேஷ் வியாபாரம் முடிந்து விட்டதால் ஓட்டலை மூடபோகிறேன் என்று தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேசை தாக்கினார். மேலும் போன் செய்து தனது சகோதரர்களான அய்யனார் மற்றும் ரமேஷ் ஆகியோரை வரவழைத்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து ஓட்டலில் இருந்த சல்லி கரண்டியை எடுத்து சுரேசை சரமாரியாக தாக்கினார். இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஓட்டல் உரிமையாளர் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் சுரேஷ் இதுகுறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பன்னீர் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரமேசை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X