என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம் பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி விட்டது.
இந்நிலையில் 17 வயது சிறுமியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தத் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 15.1.2016-ல் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஈரோடு மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பு அளித்தார். அதில் மெக்கானிக் கார்த்திக்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1.25 லட்சம் இழப்பீடாக வழங்க பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்