என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட விவசாயி
Byமாலை மலர்22 Feb 2020 12:16 PM GMT (Updated: 22 Feb 2020 12:16 PM GMT)
குடியாத்தம் வங்கி அருகே 10 ரூபாய் நோட்டுகளை வீசி ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த பரதராமி அங்கனாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நேதாஜி (வயது21). வீட்டிலிருந்தே படித்து வருகிறார்.
விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் பரதராமியில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது பைக் டேங்க் சீட் கவரில் ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
வங்கியில் இருந்து சற்று தொலைவு சென்ற நிலையில் மர்மநபர் ஒருவர் கீழே பத்து ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக் கிடப்பதாகவும், உங்களுடையதா? என கேட்டுள்ளார்.
இதனையடுத்து நேதாஜி வண்டியை நிறுத்திவிட்டு அந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் சீட் கவரில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் கவனத்தை திருப்பி ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக நேதாஜி பரதராமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் , பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரதராமியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை வருகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் சிலர் அடிக்கடி வங்கிக்கு வரும் நபர்களை நோட்டமிட்டு அவர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போலீசார் தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் அடுத்த பரதராமி அங்கனாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நேதாஜி (வயது21). வீட்டிலிருந்தே படித்து வருகிறார்.
விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் பரதராமியில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது பைக் டேங்க் சீட் கவரில் ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
வங்கியில் இருந்து சற்று தொலைவு சென்ற நிலையில் மர்மநபர் ஒருவர் கீழே பத்து ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக் கிடப்பதாகவும், உங்களுடையதா? என கேட்டுள்ளார்.
இதனையடுத்து நேதாஜி வண்டியை நிறுத்திவிட்டு அந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் சீட் கவரில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் கவனத்தை திருப்பி ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக நேதாஜி பரதராமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் , பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரதராமியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை வருகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் சிலர் அடிக்கடி வங்கிக்கு வரும் நபர்களை நோட்டமிட்டு அவர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போலீசார் தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X