என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு
Byமாலை மலர்20 Feb 2020 4:14 AM GMT (Updated: 20 Feb 2020 4:14 AM GMT)
கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014- 15-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 7,818 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை அந்தப்பகுதியில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அமைந்தன.
4-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2018-19-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரத்து 820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமான பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.
5-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் கால கணிப்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில் அவை 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்துடன் தொடர்புடையவை என்று தெரியவந்தது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகேயுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய கிராமங்களில் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் வரை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியியல் அருங்காட்சியகம் அமைக்க முதல்-அமைச்சர் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014- 15-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 7,818 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை அந்தப்பகுதியில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அமைந்தன.
4-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2018-19-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரத்து 820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமான பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.
5-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் கால கணிப்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில் அவை 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்துடன் தொடர்புடையவை என்று தெரியவந்தது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகேயுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய கிராமங்களில் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் வரை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியியல் அருங்காட்சியகம் அமைக்க முதல்-அமைச்சர் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X