என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் கொலை - 7 ஆண்டுக்கு பிறகு நடந்த பழிக்கு பழி சம்பவம்
Byமாலை மலர்4 Feb 2020 8:44 AM GMT (Updated: 4 Feb 2020 8:44 AM GMT)
அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 48) அ.தி.மு.க பிரமுகர்.
நேற்று காலை ராதாகிருஷ்ணன் அந்தியூர் அருகே செல்லப்பபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
பிறகு அந்த கும்பல் காரில் ஏறி தப்பி ஓடினர். கொலையாளிகளை உடனே பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு படி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இதையொட்டி கவுந்தப்பாடி அருகே வந்த காரை போலீசார் விரட்டினர். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.
கைதான 4 பேரும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கூலிப்படையினர் என திடுக்கிடும் தகவல் தெரிந்தது.
கூலிப்படையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் மற்றும் சிவா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் கொலையில் திடுக் தகவல் கிடைத்து உள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்தியூர் அருகே கடந்த 2013-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் சேகர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு ராதாகிருஷ்ணன் மீது இருந்தது.
இதந்கு பழிக்கு பழி வாங்க அவரது மகன் அரவிந்த் என்பவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கூலிப்படையை ஏவி ராதாகிருஷ்ணனை கொலை செய்தது. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பஞ்சாயத்து தலைவரை கொல்ல சென்னை கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திற்பதும் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 48) அ.தி.மு.க பிரமுகர்.
நேற்று காலை ராதாகிருஷ்ணன் அந்தியூர் அருகே செல்லப்பபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
பிறகு அந்த கும்பல் காரில் ஏறி தப்பி ஓடினர். கொலையாளிகளை உடனே பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு படி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இதையொட்டி கவுந்தப்பாடி அருகே வந்த காரை போலீசார் விரட்டினர். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.
கைதான 4 பேரும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கூலிப்படையினர் என திடுக்கிடும் தகவல் தெரிந்தது.
கூலிப்படையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் மற்றும் சிவா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் கொலையில் திடுக் தகவல் கிடைத்து உள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்தியூர் அருகே கடந்த 2013-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் சேகர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு ராதாகிருஷ்ணன் மீது இருந்தது.
இதந்கு பழிக்கு பழி வாங்க அவரது மகன் அரவிந்த் என்பவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கூலிப்படையை ஏவி ராதாகிருஷ்ணனை கொலை செய்தது. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பஞ்சாயத்து தலைவரை கொல்ல சென்னை கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திற்பதும் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X