என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செங்கல்பட்டு- திருவள்ளூரில் குடியரசு தினவிழா: கலெக்டர்கள் நலத்திட்ட உதவி வழங்கினர்
செங்கல்பட்டு:
71-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி பின்பு முதல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக் குட்பட்ட வெண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி பின் புறம் உள்ள மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தேசிய கொடி ஏற்றி போலீஸ் அணி வகுப்பை பார்வையிட்டார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள், போலீசாரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து ரூ. 70 லட்சத்து 63 ஆயிரத்து 352 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார். நிகழ்ச்சி யில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத் தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 32 பேருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான் றிதழ்களை வழங்கினார். பின்னர் 72 பயனாளிகளுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார்.
விழாவில், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் நாராணன், காஞ்சீபுரம் டி.எஸ்.பி., கலைச் செல்வன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கலந்து கொண்டனர்.
இதேபோல் காஞ்சீபுரம் நகராட்சியில் ஆணையாளர் மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தனார். இதில் பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மண்டல இணைபதிவாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் மண்டல இணைபதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் துணை பதிவாளர் சங்கர், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், ராஜநந்தினி, காத்தவராயன், கோதண்டராமன், மேலாளர் முரளி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல் துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 113 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 76லட்சத்து 64 ஆயிரத்து 521 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
மேலும் விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 29 போசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றி தழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவி களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி , மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் லோகநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் ஜெயகுமார், சுகாதார துறை இணை இயக்குனர் தயாளன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், கோட்டாட்சியர் வித்தியா, வட்டாட்சியர் பாண்டிய ராஜன், திருவள்ளூர் துணை சூப்பிரண்டு கங்காதரன் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்