search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட பேரன் பீர்முகமது.
    X
    கைது செய்யப்பட்ட பேரன் பீர்முகமது.

    ஈரோட்டில் பாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொலை செய்த பேரன்

    ஈரோட்டில் இன்று அதிகாலை குடிபோதையில் பாட்டி தலையில் டி.வி.யை போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, சென்னிமலை ரோடு, விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ஜோகராம்மாள் (வயது79). இவர் தனது மகன் சாதிக்பாஷா, பேரன் பீர்முகமது (39) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    சாதிக்பாஷா தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். பீர்முகமது மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பீர்முகமதுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

    பீர்முகமதுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பாட்டியுடன் தகராறில் ஈடுபடுவாராம்.

    அதைப் போன்று இன்று அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் பீர்முகமது வீட்டுக்கு வந்துள்ளார். சாதிக் பாட்ஷா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். பாட்டி ஜோகராம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    ஆத்திரமடைந்த பீர்முகமது வீட்டில் இருந்த டி.வி.யை எடுத்து ஜோகராம்மாள் தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பீர்முகமது வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஜோகராம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டவுன் டி.எஸ்.பி. ராஜு மற்றும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோகராம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர்முகமதுவை கைது செய்தனர். பாட்டி தலையில் டி.வி.யை போட்டு பேரன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×