என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் பாலத்தில் இருந்து பாலாற்றுக்குள் பாய்ந்த கார்
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று காலை அலமேலுமங்காபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தார்.
வேலூர் பழைய பாலத்தில் வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி உரசி கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்துக் கொண்டு பாலாற்றுக்குள் பாய்ந்தது.
இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. ராஜேஷ் கண்ணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் ஆற்றுக்குள் வேகமாக சென்று அவரை மீட்டனர். விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காரை மீட்கும் பணிகள் நடந்தது.
காட்பாடி-வேலூர் இடையே உள்ள இந்த பழைய பாலத்தில் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சுவர்கள் பலத்த சேதம் அடைந்தது. இடிந்து விழும் அபாய நிலையில் இருந்த இந்தச் சுவர்களை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ.4 கோடியில் சீரமைப்பு பணிகளும் நடந்தது. ஆனாலும் சுவர்கள் தரமாக அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று காலை கார் மோதியதும் சுவர் இடிந்து ஆற்றுக்குள் சென்றுவிட்டது. சுவர் பலமாக இருந்திருந்தால் ஆற்றுக்குள் கார் செல்லாமல் சாலையிலேயே நின்றிருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
பாலாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை பலம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்