என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கொடுமுடி அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை- கணவர் கைது

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குடும்ப தகராறு காரணமாக நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பழனி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஒடுவான்குறிச்சி ஆகும்.

    பொன்னுசாமியின் மகள் ஜோதிமணி (வயது35). இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும் 1 மகனும் உள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஜோதிமணி நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவர்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் ஜோதிமணி கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது கணவர் மாதேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த நர்சு ஜோதிமணி தனது சேலையால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்த ஜோதிமணி உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க முயன்றபோது அவர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

    மேலும் ஜோதிமணி சாவில் மர்மம் உள்ளது. இது பற்றி விசாரித்து அவரது கணவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கூறி ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சாலைமறியல் நடத்தியவர்களிடம் சமரசம் செய்தனர். ஆனால் உறவினர்கள் ஜோதிமணியின் கணவரை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று கூறினர்.

    இதையொட்டி ஜோதிமணியின் கணவர் மாதேஸ்வரனை மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாதேஸ்வரன் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×