search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த குழந்தை ஹிருத்திக்
    X
    உயிரிழந்த குழந்தை ஹிருத்திக்

    சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்

    ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    ஆலந்தூர்:

    ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் சக்தி முருகன். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹிருத்திக் என்ற 6 மாத குழந்தை இருந்தது. இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகே உள்ள வேங்கைவாசல் ஆகும்.

    இந்த நிலையில் சக்தி முருகன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு விமானத்தில் வந்தார். அப்போது சக்திமுருகனின் தாயும் உடன் வந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது குழந்தை ஹிருத்திக் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தீபா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அங்குள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை ஹிருத்திக் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    விமானத்தில் ஏறிய போது குழந்தை ஹிருத்திக் நலமாக இருந்ததாக தீபா தெரிவித்துள்ளார். இது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×