என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்
Byமாலை மலர்21 Nov 2019 7:51 AM GMT (Updated: 21 Nov 2019 7:51 AM GMT)
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆலந்தூர்:
ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் சக்தி முருகன். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹிருத்திக் என்ற 6 மாத குழந்தை இருந்தது. இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகே உள்ள வேங்கைவாசல் ஆகும்.
இந்த நிலையில் சக்தி முருகன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு விமானத்தில் வந்தார். அப்போது சக்திமுருகனின் தாயும் உடன் வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது குழந்தை ஹிருத்திக் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தீபா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அங்குள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை ஹிருத்திக் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
விமானத்தில் ஏறிய போது குழந்தை ஹிருத்திக் நலமாக இருந்ததாக தீபா தெரிவித்துள்ளார். இது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் சக்தி முருகன். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஹிருத்திக் என்ற 6 மாத குழந்தை இருந்தது. இவர்களது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகே உள்ள வேங்கைவாசல் ஆகும்.
இந்த நிலையில் சக்தி முருகன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு விமானத்தில் வந்தார். அப்போது சக்திமுருகனின் தாயும் உடன் வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது குழந்தை ஹிருத்திக் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு தீபா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அங்குள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை ஹிருத்திக் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
விமானத்தில் ஏறிய போது குழந்தை ஹிருத்திக் நலமாக இருந்ததாக தீபா தெரிவித்துள்ளார். இது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X