என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டவ் வெடித்த விபத்தில் ரெயில்வே பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி
Byமாலை மலர்16 Nov 2019 1:51 PM GMT (Updated: 16 Nov 2019 1:51 PM GMT)
ஈரோடு அருகே ஸ்டவ் வெடித்த விபத்தில் ரெயில்வே பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கைடமேடு ஈ.வி.ஆர். விதியை சேர்ந்தவர் சாகர் ரகுநாத் (வயது 27). இவருடைய மனைவி ஷர்தா (23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் ஷர்தா ஈரோடு ரெயில்வே எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் பயிற்சி ஊழியராக உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஷர்தா வீட்டில் இருந்த போது காபி போடுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து அவர் மீது தீப்பிடித்தது.
இதில் ஷர்தாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது வேதனையால் அலறினார். அப்போது அவருடைய கணவர் சாகர் ரகுநாத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷர்தாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.
தீயில் கருகி படுகாயமடைந்த ஷர்தாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஷர்தாவுக்கு 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷர்தா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கள்ளுக்கைடமேடு ஈ.வி.ஆர். விதியை சேர்ந்தவர் சாகர் ரகுநாத் (வயது 27). இவருடைய மனைவி ஷர்தா (23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் ஷர்தா ஈரோடு ரெயில்வே எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் பயிற்சி ஊழியராக உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஷர்தா வீட்டில் இருந்த போது காபி போடுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து அவர் மீது தீப்பிடித்தது.
இதில் ஷர்தாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது வேதனையால் அலறினார். அப்போது அவருடைய கணவர் சாகர் ரகுநாத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷர்தாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.
தீயில் கருகி படுகாயமடைந்த ஷர்தாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஷர்தாவுக்கு 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷர்தா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X