search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது

    சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு நேரடி விமான சேவை வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.

    இதையடுத்து, சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.

    முதல் நாளான இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட சிறிய ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 15 பயணிகள் இருந்தனர். விமானி ரத்தன்சிங் இதை ஓட்டிச் சென்றார்.

    இன்று முதல் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இந்த விமானம் செல்கிறது. வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×