search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் இன்று ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்த படம்.
    X
    ஈரோட்டில் இன்று ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

    இந்து-இஸ்லாமியர்களின் உறவு மேலும் வலுப்பெறும்- ஜி.கே.வாசன்

    அயோத்தி வழக்கின் தீர்ப்பு மூலம் இந்து-இஸ்லாமியர்களின் உறவு மேலும் வலுப்பெறும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மதியம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    30 ஆண்டு காலமாக அயோத்தியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு வரலாற்று சிறப்புமிக்க ஏகமனதான தீர்ப்பு இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.

    அயோத்தியை மையமாக வைத்து இதுவரை இருந்த மனக்கசப்புகள் இன்றோடு முடிவடைந்து, இன்று முதல் புதிய தொடக்கமாக நல்லுறவு தொடர வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே அதே இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த வழிமுறை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஏற்கனவே பல பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அளித்திருந்த வாக்குறுதியை ஒருமனதாக ஒத்த கருத்தோடு நிறைவேற்றவேண்டும்.

    இந்து இஸ்லாமிய மக்களின் சகோதரர் நல்லுணர்வு இந்த தீர்ப்பின் அடிப்படையில் மேலும் உறுதிப்பட வேண்டும். இந்துக் கோயில்கள் இஸ்லாமிய மசூதிகளில் கிறிஸ்தவ ஆலயங்கள் இவைகளுக்கு மத பேதமின்றி மக்கள் இந்தியாவில் சென்று வருவது நம்முடைய பழம் பெரும் கலாச்சாரமாக இருந்து வருகிறது.

    இது தொடரவேண்டும் இந்த நல்லிணக்கம் பண்பு ஒற்றுமை உணர்வு மேலும் வளர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நாட்டில் உள்ள அனைவரும் இத்தீர்ப்பை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு அமைதியை பின்பற்றக் கூடிய உயர்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் தேசப்பிதா இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்த அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழாக்களை கொண்டாடுகின்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்துக்களின் ஒற்றுமைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் காந்தியடிகள். அவைகளை மனதில் கொண்டு ஒற்றுமையை எல்லோரும் இணைந்து செயல்படுத்தக் கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×