search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் பேருந்து நிலைய நுழைவு வாயில்
    X
    வேலூர் பேருந்து நிலைய நுழைவு வாயில்

    வேலூரில் 10 அரசு பேருந்துகளை ஜப்தி செய்த அதிகாரிகள்

    வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகளை அதிகாரிகள் இன்று ஜப்தி செய்தனர்.
    வேலூர்:

    அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் டெப்போவுக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில், நிலுவைத் தொகை ரூ.1.75 கோடியை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகளை ஜப்தி செய்தனர். இந்த நடவடிக்கையால் அங்கிருந்த ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×