search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி.
    X
    ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட காட்சி.

    ஈரோடு ரெயில் நிலையத்துககு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் சிக்கினார்

    ஈரோடு ரெயில் நிலையத்துககு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

    இதைத் தொடர்ந்து அங்குள்ள போலீசார் உடனடியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீஸாரும் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார் மற்றும் போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர்.

    ரெயில் நிலையம் முழுவதும் போலீஸார் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் நிலையத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.

    மேலும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் மேலும் ஈரோடு மோப்பநாய் கயல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து பொருட்களை மோப்பம் பிடித்தது.

    ஈரோட்டில் உள்ள 4 பிளாட் பாரங்களில் போலீஸார் அங்குலம் அங்குலமாக சோதனை மேற் கொண்டனர். போலீசார் சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை .

    இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து பேசிய செல்போன் அழைப்பு ஈரோட்டில் இருந்து வந்தது தெரியவந்தது.

    போனில் பேசிய மர்ம ஆசாமி ஜியோ நெட்வொர்க் மொபைல் போனில் பேசியது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மொபைல் எண்ணை ஆதாரமாகக் கொண்டு ஈரோடு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது இதையடுத்து சிம் கார்டு வாங்க ஏற்கனவே கொடுத்திருந்த தொடர்பு எண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    இதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருடைய எண் தான் அது போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தனது செல்போன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாயமானதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மேலும் விசாரணை தீவிரப்படுத்தி செல்போன் பேசிய சிக்னலை வைத்து மேட்டுப்பாளைம் சிறுமுகை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணை ரகசியமாக நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×