என் மலர்
செய்திகள்

ரோட்டில் நாற்று நட்ட பெண்கள்
கோபி அருகே ரோட்டில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டம்
கோபி அருகே உள்ள கூகலூர் பகுதியில் பெண்கள் தார் சாலை போட வலியுறுத்தி சேறும் சகதியுமான உள்ள பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கூகலூர் அடுத்துள்ள பூலமேடு. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த ஊரில் உள்ள ரோடு மண் பாதையாக பல ஆண்டாக உள்ளது. இதில் தார் சாலை போட வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
பொதுப்பணி துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் ரோடு போட பொதுப்பணி துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கோபி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் பூலமேடு மண்பாதை ரோடு நடந்து கூட போக முடியாத அளவு சேறும் - சகதியுமாக உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் தார் சாலை போட வலியுறுத்தி அந்த இடத்தில் சேறும் சகதியுமான உள்ள பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெண்களின் இந்த நூதன போராட்டத்தை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கையுடன் பார்த்து சென்றனர்.
கோபி அருகே உள்ள கூகலூர் அடுத்துள்ள பூலமேடு. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த ஊரில் உள்ள ரோடு மண் பாதையாக பல ஆண்டாக உள்ளது. இதில் தார் சாலை போட வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
பொதுப்பணி துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் ரோடு போட பொதுப்பணி துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கோபி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் பூலமேடு மண்பாதை ரோடு நடந்து கூட போக முடியாத அளவு சேறும் - சகதியுமாக உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் தார் சாலை போட வலியுறுத்தி அந்த இடத்தில் சேறும் சகதியுமான உள்ள பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெண்களின் இந்த நூதன போராட்டத்தை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கையுடன் பார்த்து சென்றனர்.
Next Story






