என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம்
Byமாலை மலர்1 Nov 2019 8:43 AM GMT (Updated: 1 Nov 2019 8:43 AM GMT)
கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் வந்துகொண்டு இருந்தது. அதில் கொல்கத்தா, ராய்ப்பூரை சேர்ந்த நசிருதீன் நிஷா (43) என்பவர் கணவர் நவுசத் அன்சாரியுடன் பயணம் செய்தார்.
நசிருதீன் நிஷா மருத்துவ சிகிச்சை பெற சென்னை வந்ததாக தெரிகிறது. நடு வானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது நசிருதீன் நிஷாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.
இதுபற்றி விமான ஊழியர்கள் சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் நசிருதீன் நிஷாவை பரிசோதனை செய்தனர்.
அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X