என் மலர்
செய்திகள்

பிரேமலதா விஜயகாந்த்
பிரதமர் மோடி தாயுள்ளம் கொண்டவர்- பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி
இஸ்ரோ தலைவர் சிவன் அழுதபோது, பிரதமர் மோடி கட்டிபிடித்து தேற்றினார். இதன் மூலம் மோடி மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆலந்தூர் :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரயான்-2 மூலமாக இந்தியா உலகஅரங்கில் சிறந்த இடத்தை சென்று இருக்க வேண்டியது. ஆனால் விக்ரம் லேண்டர் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த மகிழ்ச்சி தருணத்தை நூல் இழையில் இழந்து இருக்கிறோம். இஸ்ரோ தலைவர் சிவன் அழுதபோது, பிரதமர் மோடி கட்டிபிடித்து தேற்றினார்.
இதன் மூலம் மோடி மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. யார் ஒருவர், கலங்கும் போது தாயுள்ளத்துடன் தட்டி கொடுக்கிறாரோ அவர் தான் மிகப்பெரிய தலைவராக இருக்க முடியும். விரைவில் இஸ்ரோ உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரயான்-2 மூலமாக இந்தியா உலகஅரங்கில் சிறந்த இடத்தை சென்று இருக்க வேண்டியது. ஆனால் விக்ரம் லேண்டர் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த மகிழ்ச்சி தருணத்தை நூல் இழையில் இழந்து இருக்கிறோம். இஸ்ரோ தலைவர் சிவன் அழுதபோது, பிரதமர் மோடி கட்டிபிடித்து தேற்றினார்.
இதன் மூலம் மோடி மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. யார் ஒருவர், கலங்கும் போது தாயுள்ளத்துடன் தட்டி கொடுக்கிறாரோ அவர் தான் மிகப்பெரிய தலைவராக இருக்க முடியும். விரைவில் இஸ்ரோ உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






