என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வீராணம் ஏரி
கீழணையிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறப்பு- வீராணம் ஏரி நிரம்புகிறது
By
மாலை மலர்29 Aug 2019 4:56 AM GMT (Updated: 29 Aug 2019 4:56 AM GMT)

கீழணையிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஏரி பாதி அளவு நிரம்பிவிட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாக்கத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள அணைகளிலிருந்து நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.
இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது. வீராணம் ஏரிக்கு கீழ்அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கீழ்அணையில் இருந்து வடவாறு வழியாக 1320 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்று 1525 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.60 அடியாக இருந்து. இன்று நீர்மட்டம் 44.72 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரி தற்போது பாதி அளவு நிரம்பிவிட்டது.
சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் 24 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 25 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் வீராணம் ஏரி நிரம்பி விடும். அதன்பிறகு சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.
சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டால் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாக்கத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள அணைகளிலிருந்து நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.
இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது. வீராணம் ஏரிக்கு கீழ்அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கீழ்அணையில் இருந்து வடவாறு வழியாக 1320 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்று 1525 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.60 அடியாக இருந்து. இன்று நீர்மட்டம் 44.72 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரி தற்போது பாதி அளவு நிரம்பிவிட்டது.
சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் 24 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 25 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் வீராணம் ஏரி நிரம்பி விடும். அதன்பிறகு சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.
சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டால் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
