என் மலர்
செய்திகள்

எந்த காரணம் கொண்டும் பெற்றோர்களை மறந்து விடக்கூடாது- அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
ஈரோடு:
ஈரோடு அடுத்த சித்தோடு அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் 24-வது பட்ட மளிப்பு விழா நடந்தது. இதில் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி தாளாளர் டி.ஜெயலட்சுமி, அமைச்சர் கே.சி.கருப்பணன், ஜோதி மணி, ஜஸ்டிஸ் மெம்பெர், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசும்போது, பட்டம் பெரும் மாணவ- மாணவிகளாகிய நீங்கள் இந்த இடத்துக்கு வருவதற்கு உறுதுணையாகவும், ஊக்குவித்து ஒவ்வொரு நொடியும் உங்களுக்காக உழைக்கும் தாய், தந்தையை ஒரு போதும் மறக்க கூடாது. நீங்கள் படித்த கல்வியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் தங்க பதக்கம் பெற்ற மாணவன் ரேவன் குமார், மாணவி காயத்ரி, 8-வது இடம் பிடித்த மாணவன் கிருஷ்ண கிருபா ஆகியோர் பதக்கங்கள் பெற்றனர்.
மேலும் 733 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் கருப்பணன் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.






