என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் தாக்கி தொழிலாளி படுகொலை
அரியலூர், ஆக. 7-
அரியலூர் அருகே கிரிக் கெட் மட்டையால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் எரக்குடி கிரா மத்தைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (வயது 56) தொழி லாளி. அதே ஊரை சேர்ந்த வர் கருப்பையன் (56). இந்த நிலையில் சின்னத்தம்பி மக னுக்கும், கருப்பையன் மக னுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக இரு குடும்பத் தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று மாலை எரக்குடி அரச மரத்தடியில் அமர்ந்து சின்னதம்பியும், அவர்களது நண்பர்களும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப் போது அந்த வழியாக நடந்து வந்த கருப்பையன், என்னை பற்றிதான் நீங்கள் கிண்டல் செய்து பேசுகிறீர்கள் என்று கூறி, சின்னத்தம்பியிடம் தக ராறில் ஈடுபட்டார்.
தகராறு முற்றவே ஆத்திர மடைந்த கருப்பையன், அரு கில் கிடந்த கிரிக்கெட் மட் டையை எடுத்து சின்னத் தம்பியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பலத்த காயம டைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரிய லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக் காக தஞ்சை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சின்னதம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னத்தம்பி யின் மனைவி வெற்றிச் செல்வி வெங்கனூர் போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கருப்பையனை கைது செய்தனர். தொடர்ந்து அவரி டம் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்