search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாஸ்கரன்
    X
    அமைச்சர் பாஸ்கரன்

    மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதே அதிமுக-வின் நோக்கம் - அமைச்சர் பாஸ்கரன்

    மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதே அதிமுக அரசின் நோக்கம் என அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

    தமறாக்கி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், பில்லூர் ஊராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையும், பொன்னாங்குளம் ஊராட்சியில் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையும், காஞ்சிராங்கால் ஊராட்சி, டி.புதூர் கிராமத்தில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    காஞ்சிரங்கால் ஊராட்சி, இலந்தங்குடிபட்டி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், மேலப்பூங்குடி ஊராட்சி, வில்லிப்பட்டி கிராமத்தில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், மலம்பட்டி ஊராட்சி, கன்னிமார்பட்டி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டிடத்தையும் என மொத்தம் ரூ.52.80 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசிய தாவது:-

    வறுமையிலுள்ளவர்கள் குடும்பம் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு ஜெயலலிதா திட்டங்களை செயல் படுத்தினார்.

    அவர் மறைந்தாலும் அவரின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே அம்மா கண்ட கனவு முழுமையாக நிறைவேறும் என்பதேயாகும். அந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடைக்கோடி கிராமப் பகுதிகளிலும் அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேறும்விதமாக முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் துறைரீதியாக உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அரசின் திட்டங்கள் முழுமையாக பெற்றுத் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, சிவகங்கை வட்டாட்சியர் கண்ணன், உதவிப் பொறியாளர் ராஜா, சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சந்திரன், கூட்டுறவு வங்கி இயக்குநtர்கள் கருணாகரன், சசிக்குமார், அய்யனார், பாண்டி, பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×