search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஊத்தங்கரை அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை

    ஊத்தங்கரை அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேஉள்ள கொண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 50). இவர் வேலூரில் போதைபொருள் தடுப்பு குற்ற புலனாய்வு (என்.ஐ.பி.சி.ஐ.டி) பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு ராணி(47), மகேஸ்வரி (45) ஆகிய இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இவர் நீண்டநாட்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு கண்மங்கலாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியடைந்த போலீஸ் ஏட்டு மாயக்கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரித்தனர். தகவலின்பேரில் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தற்கொலை செய்துகொண்ட ஏட்டுவின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×