search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதை படத்தில் காணலாம்.
    X
    வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதை படத்தில் காணலாம்.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.70 அடியாக குறைந்தது

    மழை பெய்யாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 40 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.

    வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து கீழ் அணையில் தேக்கப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரியில் சேமிக்கப்படும்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பலத்த மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. பின்னர் கீழ் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    தற்போது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

    மழை பெய்யாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 40 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

    தற்போது வீராணம் ஏரியின் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
    Next Story
    ×