என் மலர்
செய்திகள்

வேலூர் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி
கார்செட்டில் 60 ஆயிரம் லிட்டர் மழைநீர் சேகரிக்கும் வேலூர் டாக்டர்
வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர் தனது வீட்டின் கார்செட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, அந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வெயில் அதிகமாக பதிவாகிறது. மேலும் மழை மறைவு பகுதியாகவும் உள்ளதால் வேலூரில் மழையின் அளவும் குறைவாக உள்ளது.
இதனால் தண்ணீர் தட்டுப்பாடு கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் மழைநீரை சேகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் 4500 இடங்களில் உறைகிணறுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர் தனது வீட்டின் கார்செட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அசத்தியுள்ளார்.
வேலூர் பாகாயம் அடுத்த துத்திப்பட்டில் வசிப்பவர் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி. சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுகிறார்.

இவரது மனைவி சத்யா சி.எம்.சி. மருத்துவ கல்லூரி பேராசிரியர். இவர்களது வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளார்கள்.
60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் மொட்டைமாடி, கார்செட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழாய்களை இணைத்துள்ளனர்.
மழை பெய்யும்போது மழைநீர் நேராக தொட்டிக்கு செல்கிறது. அந்த தண்ணீரை சமையல் செய்யவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் உபயோகிக்கின்றனர்.
இதுபற்றி டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி கூறியதாவது:-
கடந்த 2015ம் ஆண்டு மழைநீரை சேகரிக்க முடிவு செய்தோம். இதற்காக வீட்டில் கார்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்து அதில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டினோம். அதில் குழாய்களை இணைத்து மழைநீரை சேகரித்து வருகிறோம். எங்கள் வீட்டில் 4 பேர் உள்ளனர். சமையல், குடிநீர், குளிக்க இந்த தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோம்.
இந்த தண்ணீர் எங்களுக்கு 8 மாதங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்றார். மேலும் இவரது வீட்டில் உள்ள செடிகளுக்கு அடியிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்துள்ளார். மொட்டை மாடியில் சோலார்பவர் சிஸ்டம் அமைத்துள்ளார்.
டாக்டரின் மழைநீர் சேகரிப்பை மற்றவர்களும் பின்பற்றினால் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லாமல் போய்விடும்.
வேலூர் மாவட்டத்தில் வெயில் அதிகமாக பதிவாகிறது. மேலும் மழை மறைவு பகுதியாகவும் உள்ளதால் வேலூரில் மழையின் அளவும் குறைவாக உள்ளது.
இதனால் தண்ணீர் தட்டுப்பாடு கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் மழைநீரை சேகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் 4500 இடங்களில் உறைகிணறுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர் தனது வீட்டின் கார்செட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து அசத்தியுள்ளார்.
வேலூர் பாகாயம் அடுத்த துத்திப்பட்டில் வசிப்பவர் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி. சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுகிறார்.

60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் மொட்டைமாடி, கார்செட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழாய்களை இணைத்துள்ளனர்.
மழை பெய்யும்போது மழைநீர் நேராக தொட்டிக்கு செல்கிறது. அந்த தண்ணீரை சமையல் செய்யவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகவும் உபயோகிக்கின்றனர்.
இதுபற்றி டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி கூறியதாவது:-
கடந்த 2015ம் ஆண்டு மழைநீரை சேகரிக்க முடிவு செய்தோம். இதற்காக வீட்டில் கார்கள் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்து அதில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டினோம். அதில் குழாய்களை இணைத்து மழைநீரை சேகரித்து வருகிறோம். எங்கள் வீட்டில் 4 பேர் உள்ளனர். சமையல், குடிநீர், குளிக்க இந்த தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோம்.
இந்த தண்ணீர் எங்களுக்கு 8 மாதங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்றார். மேலும் இவரது வீட்டில் உள்ள செடிகளுக்கு அடியிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்துள்ளார். மொட்டை மாடியில் சோலார்பவர் சிஸ்டம் அமைத்துள்ளார்.
டாக்டரின் மழைநீர் சேகரிப்பை மற்றவர்களும் பின்பற்றினால் தண்ணீர் பஞ்சம் என்பது இல்லாமல் போய்விடும்.
Next Story






