என் மலர்
செய்திகள்

காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி இன்று காலை காலிக்குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெரும்முளை ஊராட்சிக்குட்பட்ட புதுகாலனியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் மூலம் அடி குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நீர்மட்டம் குறைந்து விட்டதால் அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர். சீரான முறையில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த புதுகாலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டனர்.
பின்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர், சாலை வசதி, மின் விளக்குகள் போன்றவை இல்லை. எனவே அதிகாரிகள் எங்களது கோரிக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெரும்முளை ஊராட்சிக்குட்பட்ட புதுகாலனியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் மூலம் அடி குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நீர்மட்டம் குறைந்து விட்டதால் அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர். சீரான முறையில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த புதுகாலனியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் திரண்டனர்.
பின்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர், சாலை வசதி, மின் விளக்குகள் போன்றவை இல்லை. எனவே அதிகாரிகள் எங்களது கோரிக்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story






