என் மலர்
செய்திகள்

சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கத்தை பவுடராக்கி கடத்திய பெண் சிக்கினார்
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கத்தை பவுடராக்கி கடத்திய பெண்ணை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport #GoldSeized
ஆலந்தூர்:
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் தங்கத்தை பவுடராக்கி பாக்கெட்டுகளாக உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 1 கிலோ 200 கிராம் ஆகும்.
இதே போல இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உடலில் மறைத்து தங்க கட்டி கடத்தி வந்த சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.92 லட்சம் ஆகும். இது தொடர்பாக தங்கம் கடத்தி வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport #GoldSeized
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் தங்கத்தை பவுடராக்கி பாக்கெட்டுகளாக உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 1 கிலோ 200 கிராம் ஆகும்.
இதே போல இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உடலில் மறைத்து தங்க கட்டி கடத்தி வந்த சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.92 லட்சம் ஆகும். இது தொடர்பாக தங்கம் கடத்தி வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport #GoldSeized
Next Story






