search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    10-ம் வகுப்பு தேர்வு இன்று முடிந்தது- விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் தொடக்கம்

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது. #SSLC #PublicExam
    சென்னை:

    பள்ளிக்கல்வி துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது.

    மார்ச் 14-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இறுதி தேர்வான சமூக அறிவியல் இன்று முடிந்தது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 மையங்களில் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை (30-ந்தேதி) தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி வரை நடைபெறுகின்றன.

    விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்ற பின்னர் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ந்தேதி வெளியாகிறது.

    10-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ந்தேதி வெளியிடப்படும். அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்பட உள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இன்றும் நிறைவு பெற்றன. #SSLC #PublicExam
    Next Story
    ×