என் மலர்
செய்திகள்

சென்னைக்கு மின் சாதனங்களில் மறைத்து ரூ. 18 லட்சம் தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து சென்னைக்கு மின் சாதனங்களில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 18 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
துபாயில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு வந்த விமான பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அவர்கள் கொண்டு வந்த மின் சாதனங்கள் சிறிய வகை மிக்சி, எடை பார்க்கும் மெஷின் ஆகியவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை உடைத்து உள்ளே பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன.
530 கிராம் எடையுள்ள ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
சென்னையில் யாருக்கு இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது. கேரளாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
சென்னை விமான நிலையம் வழியாக தினமும் தங்கம் கடத்தி வருவதும் பிடிபடுவதும் வாடிக்கையாகி உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்ணீல் மண்ணை தூவும் அளவிற்கு தங்கம் கடத்தல் பேர்வழிகள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் அவர்களின் ‘கழுகு’ பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கி கொள்கிறார்கள். #ChennaiAirport
துபாயில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு வந்த விமான பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அவர்கள் கொண்டு வந்த மின் சாதனங்கள் சிறிய வகை மிக்சி, எடை பார்க்கும் மெஷின் ஆகியவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனை உடைத்து உள்ளே பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன.
530 கிராம் எடையுள்ள ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
சென்னையில் யாருக்கு இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது. கேரளாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
சென்னை விமான நிலையம் வழியாக தினமும் தங்கம் கடத்தி வருவதும் பிடிபடுவதும் வாடிக்கையாகி உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்ணீல் மண்ணை தூவும் அளவிற்கு தங்கம் கடத்தல் பேர்வழிகள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் அவர்களின் ‘கழுகு’ பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கி கொள்கிறார்கள். #ChennaiAirport
Next Story






