search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேரையும் விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும் - அற்புதம்மாள்
    X

    7 பேரையும் விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும் - அற்புதம்மாள்

    கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். #Arputhammal #Governor
    கரூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் நீண்ட காலமாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மாவட்டந்தோறும் சென்று மக்கள் சந்திப்பு நடத்தி வருகிறார்.

    அதன்படி கரூர் ஜவகர்பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. மாறாக அவர்களை சித்ரவதை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டது அல்ல. சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக அந்த 7 பேர் சிறையில் இருக்கிறார்கள்.



    அதே சட்டத்தின் பால் பணியாற்றும் தமிழக கவர்னர், கொலை குற்றவாளிகள் என கருதப்படும் அந்த 7 பேரையும் உடனே விடுதலை செய்ய கையெழுத்திட வேண்டும். கவர்னர் கையெழுத்திடும் வரை எனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியான அடுத்த கனமே எனது பயணத்தை ரத்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Arputhammal #Governor
    Next Story
    ×