என் மலர்

    செய்திகள்

    இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல் - 7 பேர் கைது
    X

    இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல் - 7 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது 7 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் அனைவரும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 870 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 29 லட்சம் ஆகும்.

    தங்கம் கடத்தி வந்த 7 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் 4 பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 3 பேரும் சென்னை வாலிபர்கள். அவர்கள் குருவியாக செயல்பட்டு தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    தங்கம் கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யாருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport
    Next Story
    ×