search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
    X

    ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #FishermenArrested #SriLankaNavy
    ராமேஸ்வரம்:

    தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.  

    இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். #FishermenArrested #SriLankaNavy
    Next Story
    ×