search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் கொலை
    X

    பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் கொலை

    பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கோத்தாம்பட்டியை சேர்ந்தவர் மணி என்கிற குண்டுமணி (39). பைனான்ஸ் அதிபர். இவருக்கும் குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியும் டிரைவருமான குணசேகரன் மனைவி மணி மேகலைக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மணியின் மனைவி பேபிக்கு தெரிய வந்தது.

    அவர் கணவரை கண்டித்தார். கள்ளத்தொடர்பை கைவிடும் படி கேட்டுக் கொண்டார். இதில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    மணிமேகலை கணவர் குணசேகரனும் மனைவியை கண்டித்தார்.

    இதனை தொடர்ந்து மணிமேகலையை அவரது கணவரிடம் இருந்து பிரித்து புளியம்பட்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மணி தங்க வைத்தார். அங்கு அடிக்கடி சென்று வந்தார்.

    தனது மனைவியை பிரித்ததால் குணசேகரன் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு மணிமேகலையுடன் மணி புளியம்பட்டியில் இருந்தார். அங்கு வந்த குணசேரகன் தான் கொண்டு வந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.

    இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மணி இறந்தார். அவரை குத்தி கொன்ற குணசேகரன் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான குணசேகரனை தேடி வருகிறார்கள்.

    மனைவியுடன் கள்ளதொடர்பு வைத்திருந்த பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×