search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை- போலி சாமியார் கைது
    X

    மீஞ்சூர் அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை- போலி சாமியார் கைது

    மீஞ்சூர் அருகே அருள்வாக்கு கூறுவதாக ஏமாற்றி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

    பொன்னேரி:

    சென்னை போரூரை சேர்ந்தவர் ராஜசேகர். சாமியாரான இவர், மீஞ்சூரை அடுத்த தேவதானத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோவிலில் அமாவாசை, பவுர்ணமி தினத்தில் அருள் வாக்கு கூறி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் அருள்வாக்கு கேட்பதற்கு கோவிலுக்கு சென்றார்.

    அப்போது இளம்பெண்ணிடம், சாமியார் ராஜசேகர் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதனை நம்பி இளம் பெண் சென்ற போது அவருக்கு ராஜசேகர் செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்தார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொன்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவர் இதேபோல் வேறு பெண்கள் யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×