என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு
Byமாலை மலர்27 Dec 2018 10:01 AM GMT (Updated: 27 Dec 2018 10:01 AM GMT)
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்துள்ளது. #TeacherProtest
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 24-ந்தேதி முதல் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை போலீசார் வேனில் ஏற்றி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.
விடிய விடிய அங்கு சாப்பிடாமல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதன் பிறகு பிற்பகலில் அரசு அதிகாரிகள் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் 4-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதில் 123 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக டி.பி.ஐ. வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்காக தயார் நிலையில் ஆம் புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #Teachersprotest
சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 24-ந்தேதி முதல் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை போலீசார் வேனில் ஏற்றி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.
விடிய விடிய அங்கு சாப்பிடாமல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதன் பிறகு பிற்பகலில் அரசு அதிகாரிகள் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் 4-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதில் 123 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக டி.பி.ஐ. வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்காக தயார் நிலையில் ஆம் புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #Teachersprotest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X