என் மலர்
செய்திகள்

கிராம அலுவலர்கள் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டும்- முத்தரசன்
கிராம அலுவலர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #Mutharasan
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் பத்து தினங்களுக்கு மேலாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் மேற்கொண்டு இருப்பதால், புயல் பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கல் போன்ற பணிகளும், நடவடிக்கைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Mutharasan
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் பத்து தினங்களுக்கு மேலாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் மேற்கொண்டு இருப்பதால், புயல் பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கல் போன்ற பணிகளும், நடவடிக்கைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Mutharasan
Next Story






