search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் தே.மு.தி.க. மாபெரும் போராட்டம் நடத்தும்- எல்கே சுதீஷ்
    X

    விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் தே.மு.தி.க. மாபெரும் போராட்டம் நடத்தும்- எல்கே சுதீஷ்

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரச்சினையை தீர்க்காவிட்டால் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எல்கே சுதீஷ் பேசினார். #lksudhish #dmdk #farmersstruggle

    சூலூர்:

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டையில் 5-வது நாளாக பல்வேறு கட்டமாக போராட்டம் நீடிக்கிறது.

    விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று தே.மு.தி.க. மாநில துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் சுல்தான் பேட்டை வந்தார். போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- விவசாயிகளின் பிரச்சினை பற்றி கவலைப்படாத முதல்- அமைச்சரும், பிரதமரும் உள்ளனர்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவை நிலத்தடியில் மூலம் செல்லும் போது மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல முடியாதா? விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    உயர் மின் கோபுரங்களால் ஏற்கனவே 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுர பிரச்சினையை உடனடியாக தீர்க்க விடில் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் போல் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, பனப்பட்டி தினகரன், மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில்இ தியாகராஜன், எஸ்.எம். முருகன் மற்றும் மாவட்ட துணை செயலர்கள் ஒன்றிய நகர ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #farmersstruggle 

    Next Story
    ×