என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து அனுப்பிய இளைஞர்கள்
Byமாலை மலர்25 Nov 2018 10:22 AM GMT (Updated: 25 Nov 2018 10:22 AM GMT)
புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட கிராமப்பகுதி மக்களுக்காக 10 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்து இளைஞர்கள் வேன் மூலம் அனுப்பி வைத்தனர். #GajaCyclone
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்க 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் பணி நம்பியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோசணம், மலையப்பாளையம், சாவக்கட்டுபாளையம், வேமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற பணியில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு சப்பாத்திகளை தயார் செய்தனர்.
மேலும் நம்பியூர் வட்டார பொதுமக்கள் உதவியுடன் கஜா புயல் சேதப்பகுதிக்களான வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை உள்பட மாவட்ட கிராம பகுதி மக்களுக்கு அரிசி, ரொட்டி, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பால் பவுடர், பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் அனைத்தும் வேன் மூலம் சென்று விநியோகம் செய்யப்பட்டது. #GajaCyclone
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்க 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் பணி நம்பியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோசணம், மலையப்பாளையம், சாவக்கட்டுபாளையம், வேமாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற பணியில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு சப்பாத்திகளை தயார் செய்தனர்.
மேலும் நம்பியூர் வட்டார பொதுமக்கள் உதவியுடன் கஜா புயல் சேதப்பகுதிக்களான வேதாரண்யம், நாகை, புதுக்கோட்டை உள்பட மாவட்ட கிராம பகுதி மக்களுக்கு அரிசி, ரொட்டி, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பால் பவுடர், பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் அனைத்தும் வேன் மூலம் சென்று விநியோகம் செய்யப்பட்டது. #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X