என் மலர்
செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கேரள காதல் ஜோடி தற்கொலை முயற்சி
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கேரள காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் 16-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தனர். போலீசார் அவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதல் ஜோடியான இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது.
வாலிபரின் பெயர் அபிஜித். இளம்பெண்ணின் பெயர் ரூஷ்னா. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கூட்டுமடத்தைச் சேர்ந்த அபிஜித்தும், நெல்லிகுழி பகுதியைச் சேர்ந்த ரூஷ்னாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சென்னை வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CentralRailwayStation
சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் 16-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தனர். போலீசார் அவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதல் ஜோடியான இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது.
வாலிபரின் பெயர் அபிஜித். இளம்பெண்ணின் பெயர் ரூஷ்னா. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கூட்டுமடத்தைச் சேர்ந்த அபிஜித்தும், நெல்லிகுழி பகுதியைச் சேர்ந்த ரூஷ்னாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சென்னை வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CentralRailwayStation
Next Story






