என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரணம் அடைந்த 5 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
Byமாலை மலர்2 Nov 2018 8:06 AM GMT (Updated: 2 Nov 2018 8:06 AM GMT)
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த 5 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை புறநகர், பூந்தமல்லியில் தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த சதீஷ், கடலூர் மாவட்டம், முதுநிலை தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.
சாத்தான்குளத்தில் யந்திர கம்பியர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திருமலைராஜ், திண்டுக்கல் மாவட்டம், தீத்தடுப்புக் குழு, நிலைய அலுவலர் சுந்தர மூர்த்தி, கோவை அன்னூரில் தீ அணைப்பாளர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்பியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மேற்கண்ட ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை புறநகர், பூந்தமல்லியில் தீயணைப்பாளராகப் பணியாற்றி வந்த சதீஷ், கடலூர் மாவட்டம், முதுநிலை தீயணைப்பாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்கள்.
சாத்தான்குளத்தில் யந்திர கம்பியர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திருமலைராஜ், திண்டுக்கல் மாவட்டம், தீத்தடுப்புக் குழு, நிலைய அலுவலர் சுந்தர மூர்த்தி, கோவை அன்னூரில் தீ அணைப்பாளர் ஓட்டியாக பணிபுரிந்து வந்த செல்வராஜ் என்பவர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் பணிபுரிந்து உயிரிழந்த தீயணைப்பாளர் மற்றும் யந்திர கம்பியர் ஓட்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மேற்கண்ட ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X