search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயிலில் தினமும் 55 ஆயிரம் பேர் பயணம்- அதிகாரி தகவல்
    X

    மெட்ரோ ரெயிலில் தினமும் 55 ஆயிரம் பேர் பயணம்- அதிகாரி தகவல்

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தினமும் சராசரியாக 55 ஆயிரம் பேர் பயணம் செய்வதாக அதிகாரி தெரிவித்துள்ளார். #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொது மக்கள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியார் உணவக சிற்றுண்டி கடைகள், குளிர்பான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    அண்ணாநகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உடுப்பி சிற்றுண்டி உணவக கடையில் பயணிகள் கூட்டம் இல்லாததால் திடீரென மூடப்பட்டது என செய்திகள் பரவியது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தினமும் சராசரியாக 55 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். நேற்று மட்டும் 76456 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

    எனவே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் எதுவும் குறையவில்லை. பயணிகள் கூட்டம் குறைவு காரணமாக அண்ணாநகர் உள்ளிட்ட 4 ரெயில் நிலையங்களில் சிற்றுண்டி உணவக கடைகள் திடீரென மூடப்பட்டது என்பது வீண் வதந்தியான செய்தி ஆகும். அங்குள்ள ‘உடுப்பி’ சிற்றுண்டி உணவக கடைகளில் உணவு பொருள் விலை அதிகம் காரணமாகத்தான் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள சங்கீதா போன்ற உணவக கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

    பயணிகள் வழக்கம் போல மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    Next Story
    ×