என் மலர்

    செய்திகள்

    பொன்குமார்
    X
    பொன்குமார்

    ராஜபாளையம் டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த என்ஜினீயர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். #DengueFever
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் பொன்குமார் (வயது 25). என்ஜினியர்.

    இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொன்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு பொன்குமாரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அவரை அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு இன்று காலை பொன்குமார் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் ராஜபாளையம் கொண்டு வரப்பட்டது. சுகாதார துறையினரும், வருவாய் துறையினரும் விரைந்து வந்து மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  #DengueFever


    Next Story
    ×