என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை- பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 Oct 2018 9:51 AM GMT (Updated: 16 Oct 2018 9:51 AM GMT)
காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) தருமபுரியில் உள்ள பிடமனேரியை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி (வயது 45) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் பெறப்படுவதாக தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீரென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், சார் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதியிடம் கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 266 மற்றும் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பிரகாஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரத்து 600 மற்றும் சேகர் என்பவரிடம் ரூ.8 ஆயிரத்து 920-ம் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.
மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் இடைத்தரகர்கள் பிரகாஷ், சேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு அருட்பெருஞ்ஜோதி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) தருமபுரியில் உள்ள பிடமனேரியை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி (வயது 45) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் பெறப்படுவதாக தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீரென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், சார் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதியிடம் கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 266 மற்றும் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பிரகாஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரத்து 600 மற்றும் சேகர் என்பவரிடம் ரூ.8 ஆயிரத்து 920-ம் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சார்பதிவாளர் உள்ளிட்ட 3 பேரிடமும் இருந்து கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்து 786 பறிமுதல் செய்யப்பட்டது.
சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி
மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் இடைத்தரகர்கள் பிரகாஷ், சேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு அருட்பெருஞ்ஜோதி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X