என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூரில் 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை
    X

    போரூரில் 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை

    போரூரில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #robbery

    போரூர்:

    போரூர் ராமமூர்த்தி அவென்யூ சக்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதுபற்றி பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 16 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இதேபோல் அதே பகுதி கணேஷ் அவென்யூவில் பூட்டிக் கிடந்த சதாசிவம் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 4 பவுன், பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர். இது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #robbery

    Next Story
    ×