என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் இன்று தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்
Byமாலை மலர்12 Sep 2018 9:26 AM GMT (Updated: 12 Sep 2018 9:26 AM GMT)
தஞ்சையில் இன்று காலை தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை மணமகள் நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், வல்லத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இன்று காலை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதையொட்டி இன்று காலை மண்டபத்தில் இருவீட்டார் குடும்பத்தினர், உறவினர்கள் என தடபுடலாக திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினார்.
மேலும் தான் வேறொரு வாலிபரை தாதலித்து வருவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடுக்கிட்டனர்.
இதற்கிடையே மணமகள் குடும்பத்தினர், மணமகளை சமரசப்புடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலன் அளிக்காமல் போனது. மணமகள் தான் காதலித்த வாலிபரை தான் கரம்பிடிப்பேன் என்று உறுதியாகவும், பிடிவாதமாகவும் கூறியதால் உடனடியாக திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த இருவீட்டார் உறவினர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் விரைந்து வந்து மணமகளிடம் விசாரணை நடத்தினர்.
தஞ்சையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், வல்லத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இன்று காலை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதையொட்டி இன்று காலை மண்டபத்தில் இருவீட்டார் குடும்பத்தினர், உறவினர்கள் என தடபுடலாக திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினார்.
மேலும் தான் வேறொரு வாலிபரை தாதலித்து வருவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடுக்கிட்டனர்.
இதற்கிடையே மணமகள் குடும்பத்தினர், மணமகளை சமரசப்புடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலன் அளிக்காமல் போனது. மணமகள் தான் காதலித்த வாலிபரை தான் கரம்பிடிப்பேன் என்று உறுதியாகவும், பிடிவாதமாகவும் கூறியதால் உடனடியாக திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த இருவீட்டார் உறவினர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் விரைந்து வந்து மணமகளிடம் விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X